நீங்கள் எப்படி உங்கள் பிறந்த நாள் அன்று திண் பண்டத்தின் மீது மெழுகு வர்த்தியை ஏற்றி
அதை ஊதி அனைத்து ..பின் அந்த திண் பண்டத்தை உங்கள் முகத்திலும் மற்றவர்கள் முகத்திலும்
பூசி விட்டு கொண்டாடும் பழக்கம் உள்ளவரா ?
அப்படி என்றால் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் ஒரு நல்ல நாளில் அக்னியை
அபசகுனமாக ஊதி அணைப்பது அக்னியை அவமதிப்பது போன்றது ..திண் பண்டத்தை மற்றவர்கள் மீது பூசி
விட்டு அரக்கத்தனமான சிரிப்பது உணவை அவமதிப்பது ...
இது இரண்டுமே நம் மரபு வழி பண்பாடு இல்லை ..
இது போன்ற சுப நாட்களில் அக்னியை ஏற்றுவது பண்பாடு ..உணவை சமைத்து மற்றவர்களுக்கு படைப்பது
நாகரீகம் ...நான் மேல்சொன்னது போல் அக்கினியை அணைத்து விட்டால் நீங்கள் கெட்டவர்கள் என்றோ ...
அக்கினியை ஏற்றினால் நீங்கள் நல்லவர்கள் என்றோ சொல்ல வரவில்லை
அக்னியை மதிப்பது நாகரீகம் ..அக்னியை அவமதிப்பது அனாகரீகம் ..உணவை மதிப்பது நாகரீகம் உணவை
அவமதிப்பது அனாகரீகம் - Article by tamil astrologer ragav
...........................................................................................................................................................
மகாபாரத யுத்தத்தின் போது
குரு ஷேத்ரத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டிருக்கிறது
இங்கு யாராவது ஒரு பிரம்மச்சாரி வந்து குழந்தையை தொட்டால் மட்டுமே குழந்தை
அழுகையை நிப்பாட்டும் என்று சிலர் கூறுகின்றனர் ....
ஆனால் களத்தில் பீஷ்மர் உட்பட பல பிரம்மச்சாரிகள் நிற்கிறார்கள் ஆனாலும் பயம்
இனி குழந்தையை தொட்டு அது அழுகையை நிப்பாட்ட வில்லை என்றால் அதும் பிரச்சனை
ஆகி விடும் ..யாராவது அழைத்தால் வந்து குழந்தையை தொடாமலும் இருக்க முடியாது அதும்
சந்தேகத்திற்கு இடம் வகுக்கும் ..பாவம் தர்ம சங்கடமான நிலை நம் ப்ரம்மச்சாரிகளுக்கு
ஆனால் குழந்தையோ "டேய் உன்னையும் சாவடிப்பேன் ...நானும் சாவேன் "என்பதை போன்ற
அழுகை ....நேரம் போகிறது யாரும் வரவில்லை ...கிருஷ்ணன் இறங்கி வருகிறார்
துரியோதனனுக்கு சிரிப்பே வந்து விட்டது ..கூட்டத்திலும் பலர் மறை முகமாக சிரிக்கிறார்கள்
ஏனெற்றால் கிருஷ்ணன்
பிரம்மச்சாரி என்றால் ஈ , காகம் கூட நம்பாது அது தானே உண்மை ?
ஆனால் அதை ஒன்றும் கண்டு கொள்ளாமல் கிருஷ்ணன் தனக்கே உரிய புன்சிரிப்போடு
நடந்து வந்து குழந்தையை தொடுகிறார் ...குழந்தை ....கச் முச் .....அழுகையை நிறுத்தி விடுகிறது ..
உண்மை இது தான் கிருஷ்ணன் பிரம்மச்சாரி அதில் சந்தேகம் வேண்டாம்
ஏனென்றால் அவர் கர்ம வினைகள் அவரை பாதிக்கவில்லை
அவர் ஆன்மாவாக வாழ்ந்தார்
ஆனால் நாம் மனிதர்களோ புலன்களில் வாழ்கிறோம்
இறை நிலைக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் இது தான்
- Article by Tamil astrologer ragav
.................................................................................................................................................................
.................................................................................................................................................................
விளக்கேற்றிய பின் செய்யக்கூடாதவை
1. விளக்கேற்றிய பின் தலை சீவக்கூடாது
2. வீட்டை பெருக்க கூடாது
3. விளக்கேற்றிய உடன் சுமங்கலி பெண்கள் வெளியே வரக்கூடாது
3. விளக்கேற்றிய உடன் சுமங்கலி பெண்கள் வெளியே வரக்கூடாது
4. விளக்கேற்றும் வேளையில் தூங்க கூடாது
5. விளக்கேற்றிய பின்பு பால் ,மோர் ,சுண்ணாம்பு, உப்பு ,தவிடு ,அரிசி கடன் போன்றவை யாருக்கும் கொடுக்க கூடாது
6.துணி துவைக்க கூடாது
7.தலை குளிக்க கூடாது - Article by Tamil astrologer ragav
தரித்திரம் அண்டாமல் இருக்க செய்யவேண்டியவை
1. ஒருவருக்கு பணம் கொடுக்கும் பொழுது வாசல் படிக்கு உள்ளே வந்து தான் கொடுக்கவேண்டும்
2. வாசற்படி ,உரல் ,ஆட்டுக்கல் ,அம்மி போன்றவற்றில் அமரக்கூடாது
3. கிழிந்த துணிகளை உடுக்க கூடாது
4. உப்பை தரையில் சிந்த கூடாது
5. வெற்றிலை ,வாழை இலை போன்றவற்றை வீட்டில் வாட விடக்கூடாது
6. குத்து விளக்கு முடிந்த வரை தானாக அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்
7. விளக்கை வாயால் ஊதி அணைக்க கூடாது (பிறந்த நாளுக்கும் பொருந்தும் )
8. வீட்டில் உள்ளவரை திட்டும் பொழுது சனியனே என்று திட்டக்கூடாது
9. துணிகளை உடுத்தி கொண்டிருக்கும் பொழுது அதை தைக்க கூடாது
10.தண்ணீர் சொட்ட சொட்ட ஈரத்துணியை அணிந்து வரக்கூடாது
- Article by Tamil astrologer ragav
விநாயகரை எந்த திசையில் வைத்து வணங்க கூடாது தெரியுமா...!
விநாயகரை வாஸ்து சாஸ்திரத்தின்படி வைத்து வணங்கினால் அவரின் அருள் கிடைக்கும். செல்வம் பெருகும். விநாயகரின் தும்பிக்கையானது எப்போதும் இடதுபுறமுள்ள அவரின் தாயார் கௌரியை பார்த்த வண்ணமே இருக்க வேண்டும்.
விநாயகரின் பின்புறமானது வீட்டின் எந்த ஒரு அறையினையும் பார்த்தப்படி இருக்கக்கூடாது. ஏனெனில் அவரின் பின்புறம் வறுமையினை குறிக்கும் என்பதால் வீட்டின் வெளிப்புறத்தினை பார்த்தப்படி தான் இருக்க வேண்டும்.
தென்புற திசையில் விநாயகரை வைத்து வணங்க கூடாது. கிழக்கு அல்லது மேற்கு புறமாக தான் வைத்து வணங்கவேண்டும். கழிவறையுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரை நோக்கி விநாயகரை வைக்கக்கூடாது. அதே போன்று அந்த சுவரில் சாய்த்தும் வைக்கக்கூடாது.
உலோகத்தில் செய்யப்பட்ட விநாயகர் என்றால் கிழக்கு அல்லது மேற்கு திசையினை பார்த்து வைத்து வணங்கவேண்டும். வடகிழக்கு மூலையில் வைத்து வணங்குவது இன்னும் சிறப்பான பலனை தரும்.
வீட்டிற்குள்ளாக மாடிப்படி இருந்தால் அதற்கு அடியில் விநாயகரை வைக்கக்கூடாது. ஏனெனில் மாடிப்படிகளில் ஏறி நடப்பது அவரின் தலை மீது ஏறி நடப்பதை போன்றதாகும். இது துரதிர்ஷ்டத்தினை ஏற்படுத்தும்.
-Ariticle by tamil astrologer ragav
கிரக வழிபாடுகளும் அதனால் ஏற்படும் பலன்களும்
சூரியனை வழிபட்டால் வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.
செவ்வாயை (அங்காரன்) வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.
புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.
குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.
சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.
சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.
ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.
கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும். - Article by Tamil astrologer ragav
ஜோதிடம் உருவான ஆலயம் அறிவீர்களா ?
ஸ்ரீ இராமானுஜர் அவதார ஸ்தலமான ஸ்ரீ பெரும்புத்தூர் எல்லாரும் அறிவர் ..இங்கிருந்து மூன்று கி .மி தொலைவில் உள்ளது தொடு காடு என்ற தலம் ..இங்குள்ள புராதன கோவிலாகிய பீமேஸ்வர் சிவாலயத்தில் தான் ஜோதிட கலை உருவானது என்கிறார்கள் ஏறத்தாழ தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை காடவர்கோன் என்ற அரசர் ஆட்சி செய்தபோது தன் மகனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு தமிழகத்தில் முக்கிய தலங்களுக்கு யாத்திரை சென்று விட்டார் ..தமிழ் மொழியில் மிக புலமை உள்ள இவர் "வருஷாதி நிகண்டு "என்ற ஜோதிட நூலையும் ..இன்னும் சில கோள் ஆராய்ச்சி நூல்களையும் எழுதி யுள்ளார்
இந்த நூல்களை அவர் விரிவாக எழுத காரணமே இங்குள்ள பீமேஸ்வரர் ஆலயத்தில் அவர் பெற்ற திருஷ்டி தான் காரணம் என்று அங்குள்ள ஓலை சுவடி நூல்கள் குறிப்பிடுகின்றது என்பது இங்குள்ள பக்தர்களின் தகவல் ..குறிப்பாக ஜோதிட கிரக சிந்தாமணி என்ற நூலில் கணபதி துதிக்கு அடுத்த பாடலாக தொடுக்காட்டு ஈசன் பாடல் வருகிறது .
ஐந்தருவான தொடுகாடார் ஜோதிட கிரக
சிந்தாமணி மாலை செப்பவே -கொந்தார்
குழலுமை யாடந்த குலக்குஞ்சரமுங்
கழலணி வேன் வாணியுமே காப்பு ..
சிந்தாமணி மாலை செப்பவே -கொந்தார்
குழலுமை யாடந்த குலக்குஞ்சரமுங்
கழலணி வேன் வாணியுமே காப்பு ..
ஜோதிடக்கலை பிறந்த சிவாலயத்திற்கு ஒரு முறை ஜோதிடர்களும் ,எண் கணித வித்தகர்களும் சென்று
வருவதே சிறப்பு ..சிவாலயத்தை சுற்றி சுவாமி தீர்க்கம் ,காசி தீர்க்கம் ,புதன் தீர்க்கம் ,தாமரை தீர்க்கம் ,செட்டி கோணி தீர்க்கம் போன்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன
வருவதே சிறப்பு ..சிவாலயத்தை சுற்றி சுவாமி தீர்க்கம் ,காசி தீர்க்கம் ,புதன் தீர்க்கம் ,தாமரை தீர்க்கம் ,செட்டி கோணி தீர்க்கம் போன்ற ஐந்து தீர்த்தங்கள் உள்ளன
0 comments:
Post a Comment