குரு
பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.சரி இனி ஒவ்வொரு ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்களை
பார்க்கலாம்
மேஷம்
சனி
உங்களுக்கு தந்த தரித்திரத்தை துரத்த வருகிறார் குரு .அஷ்டம சனி உங்களுக்கு தந்து கொண்டிருக்கும் தொல்லை கொஞ்சம் நஞ்சம் அல்ல தெய்வீக குருவின் வருகை சனிக்கும் சேர்த்து உங்களுக்கு நன்மை செய்யும் படி கட்டளை இடும் ....
பொதுவாகவே
ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்பவர் ...களத்திர
ஸ்தானத்து பெயர்ச்சி அடையும் குரு இது வரை தடை பெட்டிருந்த திருமணத்தை நடத்துவர் ..தரித்திரம் ஒழிப்பார், வருமானத்தை அதிகம் கொடுப்பார்..உடலில் ஏற்பட்ட காயங்கள் ஆறும் ..மனதில் பாரம் தீரும் .உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்க செய்வார் தீர்க்க யாத்திரைகள் செய்ய உகந்த நேரம் .
கலைகள் படிக்க சிறந்த நேரம் .ஆன்மீக சிந்தனையை கூட்டும் .செவ்வாய் கிழமை காலையில் செவ்வாய் ஓரையில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது
ரிஷபம்
பயப்படவேண்டாம்
பொதுவாகவே ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கு வருகின்ற அஷ்டம சனி ஆகட்டும் குரு ஆகட்டும் அதிகம் தொல்லைகள் தரப்போவதில்லை என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது
.ஆனாலும்
வாகனம் ஓட்டும் பொழுதும் ஜலத்தில் நீந்தும் பொழுதும் ஒரு கவனம் தேவை .வருகின்ற குரு பெயர்ச்சியாகட்டும் ..
சனி ஆகட்டும் ஒரு சில நாட்கள் நமக்கு வேண்டியவர்களுக்காகவோ நமக்காகவோ மருத்துவமனை வாசல் ஏறும் நிலை வரலாம் .காசு கொடுக்கல் வாங்கலை தவிர்ப்பது நல்லது ..குடும்பத்தில் மற்றும் நண்பர்கள் யாருடனும் வீண் விவாதங்கள் செய்யாமல் தவிர்ப்பது நல்லது .வெளி
நாடு செல்வதற்கு பணம் கை மாறினால் பணம்
திரும்பி வராது எச்சரிக்கையாக இருப்பது நல்லது .
உங்கள்
ஆசிரியரின் படுக்கை செய்தியோ மரண செய்தியோ காதில் விழலாம் ..மனதை அதிகம் குழப்பாமல் சனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்
மிதுனம்
உங்கள்
ராசிக்கு குரு பூர்வபுன்னியமான ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் ..கடன் தொல்லை தீரும் ..நீண்ட நாள் மனதில்
நினைத்திருந்த காரியங்களை செய்து முடிப்பீர்கள் .தெய்வீக சிந்தனை அதிகரிக்கும் .பெரியவர்களுடன் உண்டான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் ..குருக்களின் ஆசி கிடைக்கும்
உங்கள் திறமை விதையில் இருந்து முளைக்கின்ற செடிபோல வெளி படும் நேரம் .நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்..நிலம் மற்றும் வீடு வாங்க உங்களுக்கு நேரம் கூடி வருகின்றது ..வருகின்ற குருபலம் தங்களுக்கு பண பலம் தரும் ..
கல்வி
,இடமாற்றம் ,உத்தியோகத்தில் மேன்மை ,குழந்தைகளால் நன்மை போன்றவை நடக்கும் நேரம் ..முதுகு மற்றும் வயிற்றில் பிரச்சனைகள் இருந்தால் குரு பகவானின் ஆசியுடன் அது தீரும் .சபரிமலைக்கு ஒரு முறை சென்று வாருங்கள் ..நல்லது .
கடகம்
மூன்றாம்
ராசியில் இருந்த குரு உங்களுக்கு உடல் ரீதியான சிறு தொந்தரவுகளை தந்திருக்கலாம் .இப்போது நான்காம் இடமான சுகஸ்தானத்திற்கு குரு இடம்பெயர்கிறார் .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..
சுகஸ்தானத்தில்
இந்த குரு பெயர்ச்சி வாகனம் சொத்து வாங்குவதற்கு சிறந்த நேரம் ..இந்த குருபெயர்ச்சியை
நம்பி
நீங்கள் முதலீடு செய்யலாம் போன
வருட குரு பெயர்ச்சியை விட இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு யோகமாகவே அமையும் .
உடல்
ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தயார் ,தாய்மாமன் ,தாய்வழி குடும்பம் மூலம் ஆதாயம் கிடைக்கலாம் ...குடும்பத்தில்
சுப காரியத்திற்க்காக எதிர்பாராத சிலவுகள் வரலாம்
எட்டாம்
இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு அதிகம் ...வெளிநாடு செல்லும் முயற்சிகள் தாராளமாக செய்யுங்கள் வெற்றி கிடைக்கும்
வியாழக்கிழமையில்
தர்ஷணாமூர்த்திக்கு சுண்டல்
கடலை மாலை அணிவித்து வணங்குங்கள்
சிம்மம்
தனஸ்தானத்தில்
இருந்த குரு தற்போது தங்களின் ஜாதகத்தில் முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்திற்கு செல்கிறார் ..அதனால்
குரு தங்கள் திறமையை கொஞ்சம் சோதித்து பார்ப்பார் .அலைச்சலும் ,செலவும்
இருக்கும்
..முதலீடுகள் நம்பி செய்யவேண்டாம் .மருத்துவ செலவுகள் வர வாய்ப்புள்ளது இருப்பினும்
குருவின் பார்வை
உங்களை ஒரு போதும் துவண்டு போகாமல் பார்த்து கொள்ளும் பயம் வேண்டாம்
உங்கள்
ராசிக்கு 5ஆம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் மனைவி வழி ஒரு குடும்ப கோவிலுக்கு திடீர் பயணமாக செல்வீர்கள் ..திருமண வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும் ...7ஆம்
பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் ..தந்தை தந்தை வழி குடும்பம் இளைய சகோதரனால் நல்லது நடக்கும் ..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் செலவு இருந்தாலும் உங்கள் கல்லா பெட்டி காலி ஆகாது
குலதெய்வம்
கோயிலுக்கு சென்று குடும்பத்துடன் வணங்கி வாருங்கள்
கன்னி
பொரட்டி
எடுக்க ஏழரை சனியும் உங்களுக்கு இல்லை ...கடந்த
வருடத்தில் வரட்டி எடுத்த ஜென்ம
குருவும் முடிந்துவிட்டது இப்போது தன ஸ்தானத்தில் குரு
வருகிறார் அதிர்ஷ்டம் தான் போங்க ..குடும்ப ஸ்தானத்திற்கு குரு வருகிறார் உங்கள் குழந்தைகள் நீண்ட நாட்கள் உங்களிடம் கேட்ட விஷயத்தை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள் .நீண்ட நாட்களாக பார்க்காமல் இருந்த குடும்ப உறுப்பினரை பார்ப்பீர்கள் .பணம் பல வழிகளிலும் வந்து
சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும்
தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
வெளிநாட்டில்
முயற்சிப்பவர் முயற்சிக்கலாம் , தொழில் முதலீடு செய்யலாம் ,வண்டி வாகனம் வாங்குவதற்கு சிறந்த நேரம் .இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்..தனஸ்தானத்தில் வருவதனால் கொஞ்சம் முயற்ச்சியும் சேர்ந்தால் உங்களை மிஞ்ச யாரும் இல்லை
குருவின்
பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் தரும் கடன்
தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டம் நாஸ்தி ஆகும் லாபம் தரும் .தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில் ,பதவி உயர்வு ,மேல் அதிகாரிகளுடன் மன கசப்பு இருந்தால்
தீரும்
திருப்பதி
சென்று ஒரு முறை பெருமாளை வணங்கி வாருங்கள்
துலாம்
ஜென்ம
குரு ஸ்ரீ ராமனை வன வாசம் அனுப்பினார்
என்பது அனைவருக்கும் தெரிந்ததே ..ஆனால் நடை முறை வாழ்க்கையில்
கணவன் மனைவி பிரச்சனைகளை ஜென்ம குரு அதிகம் ஏற்படுத்தியது இல்லை ..மாறாக உடல் ரீதியான சில தொந்தரவுகளை பிள்ளைகளுக்கோ ,ஜாதகஸ்தனிற்கோ தரலாம் ..தலை வலி ,காய்ச்சல் ,மூக்கு பாய்ச்சல் போன்றவைகளால் அடிக்கடி தொந்தரவுகளை தரலாம்
ஆனால்
மோசமில்லாமல் பண வரவு இருக்கும்..பத்திலும் ,லக்கினத்தில் குரு பெயர்ச்சி என்னும் பொழுது குரு வின் முழு பார்வையும் உங்கள் வேலையின் மீது இருக்கும் ..உங்கள் அனுபவத்தை ,பொறுமையை ,கற்கும் நாட்டத்தை ,சகிப்பு தன்மையை ஒரு ஆசிரியர் சோதிப்பதை போன்று சோதிப்பர் ..ஆனால் கண்டிப்பாக கை
விடமாட்டார்
7ஆம்
இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் ,.கூட்டு தொழில் லாபம் போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் எதிர்பாராத ஒரு ஆதாயம் உண்டு எனலாம் .
சிவன்
கோவிலில் இருக்கின்ற தர்ஷண மூர்த்தியை வணங்குங்கள்
விருச்சிகம்
உங்கள்
ராசிக்கு இதுவரை லாபத்தில் சஞ்சரித்து
வந்த குரு பகவான் இப்போது ராசிக்கு விரயத்தில் மறைகிறார்..இது ஜாதக படியும் கோட்சார படியும் நல்ல பலன் இல்லை ..பண விரயம் வரலாம்
..யாரையும்
நம்பி
எங்கும் கை எழுத்து இடவோ
பணம் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம் ..எங்கும் சமரசத்திற்கு நீங்கள் சென்றால் இறுதியில் உங்கள் பெயரே கெடும் .கவனத்துடன் இருங்கள்
இங்கு
உங்கள் கோட்சார குரு தனது ஐந்தாம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் காணும் ..மற்றபடி கடன் தொல்லைகள் குறையும் .சத்ரு தொல்லைகள் குறையும்
செவ்வாய்
தோறும் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள் தினசரி காலை கந்த சஷ்டி கவசம் படித்து வரவும்.
தனுசு
குரு
சொந்தக்காரர்களான உங்களுக்கு லாபஸ்தானத்தில் குரு
வந்தால் பாக்கிய லட்சுமி அருள் கிடைக்கும் பொன்னும்
பொருளும் உங்களை தேடி வரும் . பத்தில் நின்ற குரு உங்களுக்கு தொழிலில் சற்று இடைஞ்சல்களை தந்திருப்பார் ஆனால் இங்கு உங்கள் தொழிலில் உண்டான சிரமங்கள் அடியோடு மாறப்போகிறது ..
மேல் அதிகாரிகளுடன் மனக்கசப்பு இருந்தால் அது தீரும் சொத்து சேர்க்கைகள் உண்டாகும். பழைய பாக்கி கணக்குகள் உங்கள் பெட்டியை நிரப்பும் .கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்து முடிப்பீர்கள் . தொட்ட காரியம் தடங்கலின்றி நிறைவேறும். நீண்ட நாட்களை வாங்க வேண்டும் என்று ஆசை பட்ட வீட்டு உபயோக பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்
மூன்றாம்
இடமான முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் புதிய முயற்சிகளை எடுப்பீர்கள்..புதிய விஷயங்கள் கற்பீர்கள்..உடல் நிலையில் மற்றும் மன நிலையில் மாற்றம்
வரும் .
பூர்வபுண்ணிய
ஸ்தானத்தை குரு பார்ப்பதால் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.களத்திரஸ்தானத்தை குரு பார்ப்பதால் கூட்டாளிகளால் லாபம் கிடைக்கும் மனைவியால் ஆதாயம் கிடைக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சுபகாரியங்கள் நடைபெறும்.
சமய
புரம் கோவிலுக்கு ஒரு முறை குடும்பத்துடன் சென்று வருவது நல்லது
மகரம்
இதுவரை
பாக்கியஸ்தானத்தில் சஞ்சரித்து
வந்த குரு இனி ராசிக்கு பத்தாம் பாவம் கர்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க போகிறார் ..அந்த பரம சிவனுக்கு பத்தில் குரு வந்த நேரம் பார்வதியுடன் தகராறும் ..அன்னத்திற்கு பஞ்சமும் கண்டு ஆண்டி ஆகிறார் என்று சொல்கிறது புலி பாணி பாடல்கள் எனவே தொழில் ஸ்தானம் என்பதால் தொழில் பணி புரியும் இடத்தில் சில சிக்கல்கள்
வரலாம் .
தொழிலில் உங்கள் சகிப்பு தன்மையை நீங்கள்
கற்றவற்றை கர்ம குரு சோதிப்பர் அதுபோல்
சில நெருங்கிய உறவுகளுடன் வாக்குவாதங்கள் சண்டை போன்றவை வரலாம் .
பத்தில்
குரு பொதுவாகவே நல்லது இல்லை உங்கள் ஜாதகதில் திசாபுத்தியும்
ஜீவன ஸ்தானமும் வலிமையாக இருப்பின் தொழிலில் இடைஞ்சல் வந்தாலும் தப்பிக்கலாம்
குரு
பார்வை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.வீட்டில்
எருக்கு பிள்ளையார் ரை வைத்து வணங்கவும்
கும்பம்
உங்கள்
ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கிறார் ..இது மிகவும் நல்ல பலன் .அதிர்ஷ்டங்கள் அள்ளி
தரும்
காலம் எனலாம் ..வெளி நாட்டில் முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கை கூடும் .நிலம்
,வீடு ,வாகனம்
போன்றவை
வாங்குவதற்கு நல்ல நேரம் .நீண்ட நாட்களாக மனதில் ஆசை பட்ட ஒரு பொருளை வாங்கி
மகிழ்வீர்கள்
.தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள் , கணவன் மனைவீக்கு இடையே உள்ள அன்னியோன்னியம் அதிகரிக்கும்
தகப்பனிடம்
இருந்தோ தகப்பன் வழி குடுத்பத்தினரிடம் இருந்தோ ஆதாயம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம்
ஆன்மீக
சுற்றுலா செல்வீர்கள் .உங்கள் வீட்டில் இருந்த பழைய பொருளை மீண்டும் புதுப்பித்து
மகிழ்வீர்கள்
குரு
பார்வை லக்கினத்தை பார்க்கிறது இது நல்ல பலன்களை தரும் ..ஏழாம் பார்வையாக முயற்சி ஸ்தானத்தை பார்க்கிறது ..புது முயற்சியை எடுப்பீர்கள் ..உங்களால் இளைய சகோதரர்களுக்கு ஒரு ஆதாயம் கிடைக்கும் பலன் இருக்கிறது
மீனம்
உங்கள்
ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் குரு மறைகிறார் .இது ஒரு சிறந்த பலன் என்று சொல்ல முடியாது
நீங்கள்
சொல்லாத விஷயத்தையே சொன்னீர்கள் என்று சொல்லி கெட்ட பெயர் எடுக்க வேண்டிய நேரம்
அதனால்
உங்கள் ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வது நல்லது ..
நீங்கள்
தேடி சென்று உதவி செய்தலும் சந்தேக பார்வையுடன் தான் பார்ப்பார்கள் ..அதனால் தற்போது தங்களின்
சொந்த விஷயத்தை மட்டும் கவனிப்பதே நல்லது.தர்ஷண மூர்த்தி படத்தை வீட்டின் கன்னி மூலையில் தெற்கு திசை பார்த்து வைத்து வாங்கவும் ..
-Prediction by tamil vedic astrologer ( Tamil jothidar ) - Ragav
0 comments:
Post a Comment